Monday, 4 August 2008

சின்ன‌ ச‌மாளிப்புக‌ள்

1.சமையலில் தேங்காய் குறைக நினைப்பவர்கள்,கிரேவி ,தக்காளி கிச்சடி,போன்றவைகளுக்கு தேங்காய் பாலுக்குப் பதிலாக அல்லது அரைத்து சேர்ப்பதற்குப் பதிலாக பதார்த்தத்தின் அளவைப் பொறுத்து ஆவின் பால் அரை கப் அல்லது ஒரு கப் கலந்தால் சுவை சரியாக இருக்கும்.
2.பொரிய‌லில் தேங்காய் துருவ‌லுக்குப் ப‌திலாக‌ வெள்ளை பிர‌ட் க்ர‌ம்ஸ் சேர்த்து கிண்டி விடுங்க‌ள்.
3.ப‌ஜ்ஜி மாவு க‌ரைக்கும் பொழுது,அடிபாக‌ம் உருண்டையான‌ பாத்திர‌த்தில் க‌ரைத்தால்,மாவின் க‌டைசி ஸ்பூன் வரை,மாவு வீணாகாமல், உருளை வாழைக்காய் ஸ்லைஸ்க‌ளைத் தோய்த்து எடுக்க‌லாம்.
4.ம‌றுநாள் காலை விருந்தின‌ர் வ‌ருவ‌து இர‌வுதான் தெரிய‌ வ‌ந்தால் திண‌றி விட‌வேண்டாம்.அரிசி உளுந்து ஊர‌ப் போட்டு ஆட்டி முடித்த‌பின் உப்பு சேர்த்து கலக்கும் பொழுதுப‌ழைய‌ இட்லி மாவைக் கொஞ்ச‌ம் க‌ல‌ந்து விடுங்க‌ள்.காலையில் மாவு த‌யார்

துரித‌ ச‌மைய‌ல்

அயல் நாட்டில் வாழும் நம் ஊர்க்காரருக்கு
துரித‌ ச‌மைய‌ல் ஒன்றிர‌ண்டு.
எப்பொழுதும் ஃபிர‌ச‌ரில் ஃபிங்க‌ர் ஃபிரைஸ்,ப‌ட்டாணி இர‌ண்டுமே வைத்திருப்போம்.அவ‌ச‌ர‌மாக‌ ஒரு பொரிய‌ல் செய்ய‌ ...க‌டாயை சூடாக்கி இர‌ண்டு க‌ர‌ண்டி எண்ணை ஊற்றி காய்ந்த‌தும்,க‌டுகு சீர‌க‌ம் தாளித்து ந‌றுக்கிய‌ வெங்காய‌த்தைப் போட்டு வ‌த‌க்குங்க‌ள்..200கிராம் உருளை ,100 கிராம் ப‌ட்டாணியைப் போட்டு வ‌த‌க்குங்க‌ள்....கார‌த்துக்கு க‌ர‌ம் ம‌சாலா பெள‌ட‌ர்,ம‌ஞ்ச‌ள் தூள் ருசிக்கு உப்பு சேர்த்து வ‌த‌க்கிய‌பின் இர‌ண்டு ஸ்லைஸ் த‌க்காளியைச் சேர்த்து ஒரு ட்விஸ்ட்....கொத்த‌ம‌ல்லி த‌ழையைத் தூவி இற‌க்கி அழ‌காக‌ பிளேட்டில் த‌ட்டினால் துரித‌ பொரிய‌ல் சாப்பிட‌த் த‌யார்.