1.சமையலில் தேங்காய் குறைக நினைப்பவர்கள்,கிரேவி ,தக்காளி கிச்சடி,போன்றவைகளுக்கு தேங்காய் பாலுக்குப் பதிலாக அல்லது அரைத்து சேர்ப்பதற்குப் பதிலாக பதார்த்தத்தின் அளவைப் பொறுத்து ஆவின் பால் அரை கப் அல்லது ஒரு கப் கலந்தால் சுவை சரியாக இருக்கும்.
2.பொரியலில் தேங்காய் துருவலுக்குப் பதிலாக வெள்ளை பிரட் க்ரம்ஸ் சேர்த்து கிண்டி விடுங்கள்.
3.பஜ்ஜி மாவு கரைக்கும் பொழுது,அடிபாகம் உருண்டையான பாத்திரத்தில் கரைத்தால்,மாவின் கடைசி ஸ்பூன் வரை,மாவு வீணாகாமல், உருளை வாழைக்காய் ஸ்லைஸ்களைத் தோய்த்து எடுக்கலாம்.
4.மறுநாள் காலை விருந்தினர் வருவது இரவுதான் தெரிய வந்தால் திணறி விடவேண்டாம்.அரிசி உளுந்து ஊரப் போட்டு ஆட்டி முடித்தபின் உப்பு சேர்த்து கலக்கும் பொழுதுபழைய இட்லி மாவைக் கொஞ்சம் கலந்து விடுங்கள்.காலையில் மாவு தயார்
Monday, 4 August 2008
துரித சமையல்
அயல் நாட்டில் வாழும் நம் ஊர்க்காரருக்கு
துரித சமையல் ஒன்றிரண்டு.
எப்பொழுதும் ஃபிரசரில் ஃபிங்கர் ஃபிரைஸ்,பட்டாணி இரண்டுமே வைத்திருப்போம்.அவசரமாக ஒரு பொரியல் செய்ய ...கடாயை சூடாக்கி இரண்டு கரண்டி எண்ணை ஊற்றி காய்ந்ததும்,கடுகு சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்குங்கள்..200கிராம் உருளை ,100 கிராம் பட்டாணியைப் போட்டு வதக்குங்கள்....காரத்துக்கு கரம் மசாலா பெளடர்,மஞ்சள் தூள் ருசிக்கு உப்பு சேர்த்து வதக்கியபின் இரண்டு ஸ்லைஸ் தக்காளியைச் சேர்த்து ஒரு ட்விஸ்ட்....கொத்தமல்லி தழையைத் தூவி இறக்கி அழகாக பிளேட்டில் தட்டினால் துரித பொரியல் சாப்பிடத் தயார்.
துரித சமையல் ஒன்றிரண்டு.
எப்பொழுதும் ஃபிரசரில் ஃபிங்கர் ஃபிரைஸ்,பட்டாணி இரண்டுமே வைத்திருப்போம்.அவசரமாக ஒரு பொரியல் செய்ய ...கடாயை சூடாக்கி இரண்டு கரண்டி எண்ணை ஊற்றி காய்ந்ததும்,கடுகு சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்குங்கள்..200கிராம் உருளை ,100 கிராம் பட்டாணியைப் போட்டு வதக்குங்கள்....காரத்துக்கு கரம் மசாலா பெளடர்,மஞ்சள் தூள் ருசிக்கு உப்பு சேர்த்து வதக்கியபின் இரண்டு ஸ்லைஸ் தக்காளியைச் சேர்த்து ஒரு ட்விஸ்ட்....கொத்தமல்லி தழையைத் தூவி இறக்கி அழகாக பிளேட்டில் தட்டினால் துரித பொரியல் சாப்பிடத் தயார்.
Wednesday, 16 July 2008
டையமண்ட் பிஸ்கட்
டையமண்ட் பிஸ்கட் my recipe
-----------------
மைதா-1-கப்
சர்க்கரை பெளடர்-2- கப்
பொரிக்கத் தேவையான எண்ணை
உப்பு -கால் டீஸ்பூன்
மைதா மாவு பிசைய, அளவான தண்ணீர்.
------
மைதா மாவுடன் சிட்டிகை உப்பு சேர்த்து சிறுது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும் சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்
எண்ணையைக் கடாயில் ஊற்றி மிதமான சூட்டில் வைக்கவும் .
பொடித்த சர்க்கரையை அகலமான தட்டில் பரத்தித் தயாராக வைத்துக் கொள்ளவும்
அகலமான சப்பாத்திக் கல்லில் மைதா மாவை பெரிய சைசில் பூரிகளாக இட்டவும்
மைதா மாவை மேலே தூவி,டையமண்ட் கட்டர் கொண்ண்டு பூரியைத் துண்டு போடவும்.
காய்ந்த எண்ணையை சிறிது காஸ் அளவைக் கூட்டிய பின் டையமண்ட் துண்டுகளை மெதுவாக எண்ணையில் போட்டு மொறு மொறுப்பாகப் பொரித்து எடுக்கவும் .
பொரித்து எடுத்த டையமண்ட் வில்லைகளை சூடு ஆறுமுன் சர்க்கரை பொடியில் போட்டு ,வில்லைகளில் சர்க்கரைப் பூச்சு பரவும் படி பிசறி விடுங்கள்.காற்று புகாத டப்பாக்களில் அடைக்கும் முன் செய்த பண்டங்கள் மிதமான அறையின் சூட்டுக்கு வருவது அவசியம்.
செய்து பார்த்து சொல்லுங்கள்.
-----------------
மைதா-1-கப்
சர்க்கரை பெளடர்-2- கப்
பொரிக்கத் தேவையான எண்ணை
உப்பு -கால் டீஸ்பூன்
மைதா மாவு பிசைய, அளவான தண்ணீர்.
------
மைதா மாவுடன் சிட்டிகை உப்பு சேர்த்து சிறுது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும் சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்
எண்ணையைக் கடாயில் ஊற்றி மிதமான சூட்டில் வைக்கவும் .
பொடித்த சர்க்கரையை அகலமான தட்டில் பரத்தித் தயாராக வைத்துக் கொள்ளவும்
அகலமான சப்பாத்திக் கல்லில் மைதா மாவை பெரிய சைசில் பூரிகளாக இட்டவும்
மைதா மாவை மேலே தூவி,டையமண்ட் கட்டர் கொண்ண்டு பூரியைத் துண்டு போடவும்.
காய்ந்த எண்ணையை சிறிது காஸ் அளவைக் கூட்டிய பின் டையமண்ட் துண்டுகளை மெதுவாக எண்ணையில் போட்டு மொறு மொறுப்பாகப் பொரித்து எடுக்கவும் .
பொரித்து எடுத்த டையமண்ட் வில்லைகளை சூடு ஆறுமுன் சர்க்கரை பொடியில் போட்டு ,வில்லைகளில் சர்க்கரைப் பூச்சு பரவும் படி பிசறி விடுங்கள்.காற்று புகாத டப்பாக்களில் அடைக்கும் முன் செய்த பண்டங்கள் மிதமான அறையின் சூட்டுக்கு வருவது அவசியம்.
செய்து பார்த்து சொல்லுங்கள்.
ஆப்பிள் ஜாம்
--
ஆப்பிள் 2
சர்க்கரை 1-கப்
தண்ணீர்-அரை கப்
டோனோவின் எசென்ஸ் 1/4 டீஸ்பூன்
--------------
அடி கனமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும் .
ஒரு இன்ச் கனத்தில் வெட்டப்பட்ட ஆப்பிள் துண்டுகளை, அதோடு சேர்த்து வேகவிடவும்.
5 நிமிடங்களில் ஆப்பிள் வெந்து விடும் .வெந்த பழத் துண்டுகளை, அஞ்சலி பழகூழ் பிரித்தெடுக்கும் வடிகட்டியில் போட்டு சுழற்றுங்கள்.
விதையும் தோலும் நின்றுவிட, கூழ் மட்டும் வடிகட்டப்பட்டு பாத்திரத்தில் சேரும் .
அதோடு சர்க்கரையைக் கலந்து கொதிக்க விடுங்கள்.
ஜாம் பதம் வந்ததும் டோனொவின் எசென்ஸ் சேர்த்து ஆற வைக்கவும் .
ஆறிய பின் பாட்டிலில் அடைக்கவும்.
வீட்டிலேயே அருமையான ஆப்பிள் ஜாம் தயார்.
-----------------
ஆப்பிள் 2
சர்க்கரை 1-கப்
தண்ணீர்-அரை கப்
டோனோவின் எசென்ஸ் 1/4 டீஸ்பூன்
--------------
அடி கனமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும் .
ஒரு இன்ச் கனத்தில் வெட்டப்பட்ட ஆப்பிள் துண்டுகளை, அதோடு சேர்த்து வேகவிடவும்.
5 நிமிடங்களில் ஆப்பிள் வெந்து விடும் .வெந்த பழத் துண்டுகளை, அஞ்சலி பழகூழ் பிரித்தெடுக்கும் வடிகட்டியில் போட்டு சுழற்றுங்கள்.
விதையும் தோலும் நின்றுவிட, கூழ் மட்டும் வடிகட்டப்பட்டு பாத்திரத்தில் சேரும் .
அதோடு சர்க்கரையைக் கலந்து கொதிக்க விடுங்கள்.
ஜாம் பதம் வந்ததும் டோனொவின் எசென்ஸ் சேர்த்து ஆற வைக்கவும் .
ஆறிய பின் பாட்டிலில் அடைக்கவும்.
வீட்டிலேயே அருமையான ஆப்பிள் ஜாம் தயார்.
-----------------

கொத்தமல்லி சட்னி
கொத்தமல்லி சட்னி
--------------------
ரொம்ப சிம்பிள்
===============
ஒரு கட்டு கொத்தமல்லி...
ஒரு தக்காளி
ஒருவெங்காயம்
5-8சிகப்பு மிளகாய்
3-பல் பூண்டு
1- வெங்காயம்
கறிவேப்பிலை-2 உருவல்[ஆங்கிலத்தில் 2 ஸ்பிரிங் என்று அர்த்தம்]
கடுகு உளுந்தம்பருப்பு-இரண்டிலும் ஒரு டீஸ்பூன்
கடலைப் பருப்பு -ஒரு டீ.ஸ்
பெருங்காயப் பொடி 1/2 டீஸ்பூன்
எண்ணை -2 டேபிள்ஸ்பூன்
கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைக்கவும்
எண்ணையை ஊற்றி காய்ந்ததும்,கடுகு உளுந்து,கடலைப் பருப்பு,ஆகியவைகளைத் தாளிக்கவும்.பிறகு மிளகாய் வத்தலைப் போடவும்,பெருங்காயப் பொடி சேர்த்து மணம் வந்ததும்,நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பூண்டு புளி அனைத்தயும் சேர்த்து வதக்கவும்,கடைசியாக,அலசி காயவைத்த கொத்தமல்லித் தழையை போட்டு ஒரு முறை கிண்டி விட்டு,ஒரு பெரிய தட்டில் அவைகளைப் பரத்தி ஆற வைக்கவும் [.சூட்டோடு மிக்ஸியில் போட்டு அரைத்தால் மூடி எகிறும் என்று சொல்லாமலேயே தெரியும்]
நன்றாக ஆறியதும் தேவையான உப்பு கலந்து ,மிக்ஸியில் சிறுது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்[அம்மியில் அரைத்தால் சுவை கூடும்]
அன்றே காலியாகுமென்றால் மறுபடியும் வதக்க வேண்டாம்.
அப்படியே சாப்பிடலாம்.
3டீஸ்பூன் எண்ணையை சூடாக்கி அதில் சட்னியை வதக்கி எடுத்து வைத்தால் இரண்டு நால் கெடாமல் இருக்கும்.
இட்லி தோசை,சப்பாத்தி பிரட் சாண்ட்விச் என்று சகலத்துக்கும் பொருத்தமான ஜோடி
--------------------
ரொம்ப சிம்பிள்
===============
ஒரு கட்டு கொத்தமல்லி...
ஒரு தக்காளி
ஒருவெங்காயம்
5-8சிகப்பு மிளகாய்
3-பல் பூண்டு
1- வெங்காயம்
கறிவேப்பிலை-2 உருவல்[ஆங்கிலத்தில் 2 ஸ்பிரிங் என்று அர்த்தம்]
கடுகு உளுந்தம்பருப்பு-இரண்டிலும் ஒரு டீஸ்பூன்
கடலைப் பருப்பு -ஒரு டீ.ஸ்
பெருங்காயப் பொடி 1/2 டீஸ்பூன்
எண்ணை -2 டேபிள்ஸ்பூன்
கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைக்கவும்
எண்ணையை ஊற்றி காய்ந்ததும்,கடுகு உளுந்து,கடலைப் பருப்பு,ஆகியவைகளைத் தாளிக்கவும்.பிறகு மிளகாய் வத்தலைப் போடவும்,பெருங்காயப் பொடி சேர்த்து மணம் வந்ததும்,நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பூண்டு புளி அனைத்தயும் சேர்த்து வதக்கவும்,கடைசியாக,அலசி காயவைத்த கொத்தமல்லித் தழையை போட்டு ஒரு முறை கிண்டி விட்டு,ஒரு பெரிய தட்டில் அவைகளைப் பரத்தி ஆற வைக்கவும் [.சூட்டோடு மிக்ஸியில் போட்டு அரைத்தால் மூடி எகிறும் என்று சொல்லாமலேயே தெரியும்]
நன்றாக ஆறியதும் தேவையான உப்பு கலந்து ,மிக்ஸியில் சிறுது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்[அம்மியில் அரைத்தால் சுவை கூடும்]
அன்றே காலியாகுமென்றால் மறுபடியும் வதக்க வேண்டாம்.
அப்படியே சாப்பிடலாம்.
3டீஸ்பூன் எண்ணையை சூடாக்கி அதில் சட்னியை வதக்கி எடுத்து வைத்தால் இரண்டு நால் கெடாமல் இருக்கும்.
இட்லி தோசை,சப்பாத்தி பிரட் சாண்ட்விச் என்று சகலத்துக்கும் பொருத்தமான ஜோடி
Subscribe to:
Posts (Atom)